Puvana Chandrashekaran
தற்கொலை என்கிற பிரச்சினை இன்றைய சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் மிகவும் மோசமான விஷயம். தற்கொலை செய்யத் துணிவோரைத் தடுத்து நிறுத்த சில நல்லவர்கள், சமுதாய அக்கறையுடன் எடுக்கும் சில முடிவுகளால், பலருடைய வாழ்க்கையில் மாற்றம் வருகிறதா என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
எனது பெயர் புவனா சந்திரசேகரன். விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட வங்கி ஊழியர். கடந்த நாலரை ஆண்டுகளாக, கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள் எழுதி வருகிறேன். என்னுடைய பல படைப்புகள், போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கின்றன.
புதிய கதைக் களங்களை எடுத்துக் கொண்டு எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னுடைய ஒன்பது நாவல்கள் அச்சில் வெளிவந்துள்ளன. பல கதைகள் புஸ்தகாவிலும் கிடைக்கின்றன. சிறுவர் மின்னிதழ் ஒன்றின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். நாற்பது வருட தில்லி வாழ்க்கைக்குப் பிறகு தற்போது மதுரையில் வசிக்கிறேன். வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். நன்றி.